சென்னை:
மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 3 பேரின் குடும்பத்துக்குத் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிது முதல்வர் மு. க. ஸ்டாலின் உதிரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை கிழக்கு கிராமத்திலுள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் 39 மாணவர்கள் மற்றும் 3 பேராசிரியர்கள் கேரளா மாநிலத்திற்குப் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்ற நிலையில் கடந்த 19ம் தேதி மூணாறு பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆத்திகா (20), வேணிகா (20) ஆகிய 2 மாணவிகள், சுதன் நித்யானந்தன் (20) என்ற மாணவன் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், காயமடைந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவன் கெவின் எட்மர் இட்சோன் சுரேஷ் (20) என்பவருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ரூ.1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் கூறப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings