சென்னை:
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேசியபோது, ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவவாதி’ என்று கூறினார். இது அதிமுகவினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணாமலையை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
தன்மீதான விமர்சனம் குறித்து அண்ணாமலை தெரிவித்தபோது ‘ஜெயலலிதா இந்துத்துவா தீவிரவாதி தான். இதைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். அதிமுகவினர் யார் வேண்டுமானாலும் என்னுடன் விவாதம் செய்யலாம்’ என்று விமர்சனத்துக்கு சவால் விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ‘அரசியல்வாதிகளுடன் விவாதம் செய்யலாம். ஆனால் அரசியல் வியாதி உள்ள வியாபாரி அண்ணாமலையுடன் எப்படி விவாதம் செய்ய முடியும் என்று பதிலடி கொடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings