ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு நகராட்சி மூலம் குப்பை சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சில நாட்களாக தெருக்களில் அமைக்கப்பட்ட தொட்டிகள் நகராட்சி மூலம் தலைகுப்புற கவிழ்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் வீசி செல்லும் அவலநிலை உருவாகி உள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. குப்பைகள் வெளியே கிடப்பதால் கால்நடைகள் மற்றும் தெரு நாய்கள் குப்பை கழிவுகளை உண்பதற்கு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவ்வழியே செல்லும் போது தெருநாய்கள் அச்சுறுத்துகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் குடியிருப்புகள் மற்றும் கடைகளில் உள்ள குப்பைகளை முறையாக பெற்றுச் செல்ல வேண்டும் என்றும், சாலை ஓரங்களில் உள்ள குப்பை தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும்
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings