சென்னை
கேரள மாநிலத்தில் அசுத்தமான நீரில் காணப்படும் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கோழிக்கோட்டை சேர்ந்த சிறுவன், கண்ணூரைச் சேர்ந்த தட்சிணா, மலப்புரத்தை சேர்ந்த பட்டுவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அசுத்தமான நீரில் இருந்து மூக்கு வழியாக இவ்வகை அமீபாக்கள் உடலில் நுழையும் போது நோய் தொற்று ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில் மனித மூளையை தாக்கும் அமீபா குறித்து அச்சமடைய வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமீபா பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நீச்சல் குளம் மூலம் இந்த அமீபா நுண்ணுயிரி பரவ வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அதற்கேற்ற சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings