in

கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு: திமுக

சென்னை:

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கள்ளக்குறிச்சி விஷசாராய உயிரிழப்புகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

கள்ளச்சாராய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செயயாமல் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக போராடக் கூடாது.

கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக, பாஜகவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அதிமுக ஆட்சியல் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் அதிமுகவினர் அவற்றுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக விவாதிக்க தயாராக இல்லை.

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய மரண விவகாரத்தை திசை திருப்ப சிபிஐ விசாரணை நடக்க வேண்டும் என்று கேட்கின்றனர். 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இவ்விவகாரத்தை பூதாகரமாக்குகின்றனர்.  பாஜக ஆட்சி செய்யும் குஜராத், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டபோது பாஜகவினர் ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை. விக்கிரவாண்டி தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கள்ளகுறிச்சி கள்ளச்சாராய விவசாரத்தை அதிமுகவினரும், பாஜகவினரும் பெரிதுபடுத்துகின்றனர் என்று குறிப்பிட்டார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இந்திய கடலோர மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் திட்டம்: கடலோர பாதுகாப்பு படை தீவிர ஒத்திகை