சென்னை:
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கடந்த 4ம் தேதி போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். 2 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தி அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து ஜாமீன் கோரி அம்பத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகானின் மகன், சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நாளை (24ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings