ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அச்சப்பிரம்பு எனும் பகுதியில் வலது புறம் சுமார் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அதில் 10 ஏக்கரில் ரூ. 7.35 கோடி செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் காட்டு ரோஜா உள்ளிட்ட அரிய மலர்கள், கூந்தல் பனை உள்ளிட்ட தமிழக பாரம்பரிய மரங்கள், கற்றாழை உள்ளிட்ட வறட்சிப் பகுதி தாவரங்கள், பாலை நிலத்தை நினைவூட்டும் மணல் மேடுகள், ஓலையால் ஆன குடில்கள், குகை கட்டடம், யானை, மான் போன்ற விலங்கின சிலைகள், சிறுவர்கள் விளையாடும் பகுதி ஆகியவை அமைக்கப்பட்டன.
ஆனால், இந்த பூங்காவை தற்போதைய நிர்வாகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இப்பூங்கா முன்புறம் பதிக்கப்பட்டுள்ள தரை ஓடுகள் அனைத்தும் பெயர்ந்து காணப்படுகின்றன. நுழைவு வாயில் அருகே உள்ள யானை சிலை, பாதையோர யானை சிலை, பாதையோர மின் அலங்கார விளக்குகள் சேதமடைந்துள்ளன. மணல் மேடுகள் புதர் மேடுகளாகிவிட்டன.
சிறிய மழை பெய்தால் கூட சிறுவர் விளையாட்டு பகுதியின் அருகே நடைபாதை உள்ளிட்ட அனைத்திலும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பூங்காவை புதுப்பிக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings