நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையை கண்காணிக்க வனத்துறை சார்பில் மூன்று இடங்களில் கேமரா பொருத்தம் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு , மற்றும் தண்ணீர தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அருவங்காடு பாலாஜி நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து நான்கு வளர்ப்பு நாய்களை வேட்டையாடி சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.
இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை எழுந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க கட்டபெட்டு வன சரகர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் வனத்துறை மூன்று இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிறுத்தை வரும் இடத்தை அறிந்து கூண்டு வைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல்). 8870917777
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings