ஆம்பூர்
திரும்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி உமராபாத் பகுதியை சேர்ந்தவர் அன்சர். இவரது வீட்டின் சமையலறைக்குள் 9 அடி நீள மலைப்பாம்பு இருப்பதை கண்ட அன்சர் குடும்பத்தினர் பீதியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனச்சரகர் பாபுவுக்கும், ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு ஆம்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையை சேர்ந்த வீரர்களும் வந்த ஆம்பூர் வனச்சரக்கத்தை சேர்ந்த வனக்காப்பாளர்கள் ராஜ்குமார், பால்ராஜ், சிவா ஆகியோர் வீட்டின் சமையல் அறைக்குள் இருந்த மலைப்பாம்பை மீட்டனர்.
இதுகுறித்து உமராபாத் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், உமராபாத் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. வனப்பகுதியின் கானாறுகளில் வந்த தண்ணீர் வயல்வெளிகளிலும், மக்கள் வசிப்பிடங்களுக்கும் நோக்கி வந்து தேங்கியது. கானாற்று தண்ணீரில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்துள்ளது.
வீட்டில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் வீட்டு உரிமையாளர் ஈடுபட்டிருந்தபோது மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை கவனித்தார். உடனடியாக ஆம்பூர் வனத்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்து அவர்கள் மலைப்பாம்பை வந்து மீட்டு சென்றனர்.
பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் ஆம்பூர் சாணாங்குப்பம் காப்பு காட்டில் விட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings