ராமநாதபுரம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ.10,0000-த்திற்கான காசோலையும் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷை பாராட்டினார்.
அப்போது ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பத்மாஸனி உடனிருந்தார்.
ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் சுபாஷ் சீனிவாசன் இதுவரை 5000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதோடு, மரங்களில் அடிக்கப்பட்ட 20,000 விளம்பர பதாகைகளையும், சுமார் 500 கிலோ ஆணிகளையும் அகற்றியுள்ளார்.
மேலும் பசுமை முதன்மையாளர் விருதுடன் வழங்கப்பட்ட ரூ.1,00000/-த்திற்கான காசோலையை, ராமநாதபுரம் மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மற்றும் மருத்துவ செலவிற்காக வழங்கியுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings