சென்னை
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரள மாநிலம் மற்றும் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லைகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரையில் கரையை கடக்கும்.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்பட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் வெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்க்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings