in

கரும்பு லாரிகளை குறிவைத்து வேட்டையாடும் ஒற்றை யானை வேட்டையன்

ஈரோடு

தாளவாடி பகுதியில் கரும்பு லாரிகளை குறிவைத்து வேட்டையாடும் ஒற்றை காட்டு யானைக்கு வேட்டையன் என  தாளவாடி பொதுமக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீருக்காக வனச்சாலையை கடந்து செல்வது வழக்கம்.

சில நேரங்களில் யானைகள் சாலையோரமாக உள்ள செடி, கொடிகளை தின்றபடி அங்கேயே நடமாடுவது வழக்கம். சமீப காலமாக ஒற்றை காட்டு யானை ஒன்று தாளவாடி அருகே முகாமிட்டு அந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை குறிவைத்து ஏதாவது சாப்பிட கிடைக்குமா எனத் தேடி வேட்டையாடி வந்தது.

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்டாபுரம் அருகே கடந்த சில வாரங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்து கொண்டுள்ளது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்பு உள்ளதா என தேடுவது தொடர் கதையாக மாறிவிட்டது. இதைக் கண்டு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொள்கின்றனர்.

 இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கும்டாபுரம் ஊருக்குள் நுழைந்து ஸ்ரீ பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அலுவலகம் அருகே கரும்பு லாரிகளை தேடியவாறு அலைமோதியது.

இதைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 2 மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த யானைக்கு பொதுமக்கள் வேட்டையன் என்று பெயர் சூட்டியுள்ளனர். தாளவாடி பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து கரும்பு லாரிகளை குறிவைத்து வேட்டையாடி வரும் வேட்டையன் ஒற்றைக் காட்டுயானையை பிடித்து வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென வனத்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆரச்சார் நிலத்தை மீட்க கோரி இந்து தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு: வானிலை