ர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி மகன் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி சந்தியா என்கின்ற மனைவியும் மூன்று மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் பழனிக்கு ஐந்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. பழனியின் உடன் பிறந்த தேவன் மற்றும் தங்கராஜ், தங்கராஜ் மகன் சேட்டு ஆகியோருக்கு இடையே நில சம்பந்தமான பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
பழனி மற்றும் உடன் பிறந்த தம்பி மற்றும் மகன்கள் சேர்ந்து தம்பதியர் மற்றும் மணிகண்டன் அம்மாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த தம்பதியர் இருவரும் கை குழந்தையுடன் செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டு விஷம் அருந்துவது போலும் குழந்தைக்கு கொடுப்பது போலும் சமூக வலைத்தளத்தில் வீடியோவை பதிவிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தம்பதியரின் உறவினர்களை விசாரித்து செல்போன் நம்பரை வாங்கி தொடர்பு கொண்டதில் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த வீடியோவானது காட்டு தீ போல் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதனை கண்ட காவல்துறையினர் கடைசியாக வீடியோ வெளியிட்ட இடத்தின் செல்போன் சிக்னலை வைத்து தம்பதியினர் மறைந்து இருந்த இடத்தை கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்பதியர் செல்போனில் தற்கொலை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் அனுப்பியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings