in

நாய் கடித்த 5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை

சென்னை:

சென்னை ஆயிரம்விளக்கு, பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் காவலாளி ரவி என்பவரது 5 வயது மகளை புகழேந்திர என்வரது வளர்ப்பு நாய்களான ‘ராட்வீலர்’ வகையை சேர்ந்த 2 நாய்கள் திடீரென கடித்து குதறின. இதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் நாய்களை வளர்த்த புகழேந்தி, அவரது மனைவி, மகன் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

நாய்கள் கடித்ததில் சிறுமிக்கு கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை (பிளாஷ்டிக் சர்ஜரி) செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாகவும் வரும் செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மீனம்பாக்கத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது

திருச்செந்தூரில் 100 அடி உள்வாங்கிய கடல்