கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். நேற்று இரவு 18 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மதியம் வரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35ஆக அதிகரித்தது. தொடர்ந்து மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் உள்ள மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings