in

கடலில் மூழ்கி இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்

சென்னை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த IND -TN -11-MM-110 என்ற பதிவெண் கொண்ட இயந்திர மீன்பிடி படகில் கடந்த 15.6.2024 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மீன்பிடி படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதால், மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களில் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சிஅன்னை நகரைச் சேர்ந்த ஜெமாலை மகன் ஆரோக்கியம் (வயது 50), ஜனிசை மகன் பரகத்துல்லா, சையது முகமது புஹாரி மகன் கலீல் ரஹ்மான் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தயவர்களின் குடும்பத்திற்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மேற்கு வங்காளத்தில் ரயில்கள் மோதல்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

மோடி ஆட்சிக்கு எதிரி சந்திபாபு நாயுடுவோ, நிதிஷ்குமாரோ இல்லை… அ.ராசா எம்பி கூறுவது என்ன?