in

மலை மாவட்டத்தில் மலை ரயிலின் வரலாறு.

நீலகிரி

நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மலைரயில்  மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை   1899 ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தை துவங்கிய தினம்  ( ஜீன்‌ 15) இன்று.

இன்றுடன்  125 ஆவது ஆண்டு என்பதால் மலை ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

மலை பிரதேசம் என்பதே இயற்கையின் அழகிற்கு  குறைவில்லாத இடம்தான். அதை மலைகளின் மடிப்புகளின் வழியே ரயில் மூலம் கண்டுகளிப்பது பேரானந்த அனுபவமாக இருக்கும். நீலகிரி மாவட்டத்திற்கு  செல்லும் சுற்றுலா பயணிகள் எல்லோரும் நிச்சயம் சுற்றிப்பார்க்க வேண்டும் என ஆசைப்படுவது, மலை ரயில் வழியாக மலைகளின் பச்சைப்பசேல் அழகை.

ஆசியாவில் தற்போதும் பல்சக்கரங்களில் இயங்கும் ஒரே மலை ரயில் நீலகிரி மலை ரயில் ஆகும். இந்த

நீலகிரி மலைரயில் 208 வலைவுகளின் வழியாக வலைந்தும் நெலிந்தும் 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறி 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் பயணம் செய்கிறது. இந்த மலை ரயில்  முதல்முறையாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்பட்ட தினம் இன்று (ஜீன் 15).

1880   குன்னூர் ரயில்வே கம்பெனி துவங்கினர் ஆனால் போதிய நிதி கிடைக்காததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 1890 ஆம் ஆண்டில் நீலகிரி மலை ரயில் கம்பெனி  பல்சக்கரங்களால் ஆனா தண்டவாளம் அமைத்து  குன்னூர் வரை அமைக்கப்பட்டு நீராவி என்ஜின் மூலம்   1899-ஆம் ஆண்டு  ஜீன் 15 ஆம் தேதி தனது   முதல்  பயணத்தை துவங்கியது‌.

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால், தண்டவாளங்களுக்கிடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.  இன்றுடன் தனது 125 ஆவது ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் மலை ரயில் மற்றும் குன்னூர்  ரயில் நிலையம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடினர். வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.

செய்திகளுக்காக.                                             உள்ளாட்சி முரசு நாளிதழ்.                                  மாவட்ட தலைமை செய்தியாளர்.                           A.ஜான்டிசோசா(டானியல் )

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிங்கார ரயில் பாதையில் காட்டு யானைகள்

மேற்கு வங்காளத்தில் ரயில்கள் மோதல்; 5 பேர் பலி- 30 பேர் காயம்