சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா சென்னையில் மருத்துவராக பணியாற்றி வந்தபோது கடந்த 2013ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்த விசாரணையில், டாக்டர் சுப்பையாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது குடும்பத்திற்கும் இடையே அஞ்சுகிராமத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான நிலம் தொடர்பாக பிரச்சனை இருநதது வந்தது. இதில் சுப்பையாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் பொன்னுசாமி குடும்பத்தினர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு சென்னை முதலாவது அமர்பு நீதிமன்றம் பொன்னுசாமி, அவரது மகன் பாசில், போரிஸ் மற்றும் இவர்களது நண்பர்கள் வில்லியம்ஸ், ஜேம்ஸ், கூலிப்படையை சேர்ந்த முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனையும், மேரிபுஷ்பம், ஏசுராஜன் ஆகியே 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
தூக்கு தண்டனையை எதிர்த்து 7 பேரும், ஆயுள் தண்டனையை எதிர்த்து 2 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று அளித்த தீர்ப்பில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings