திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் வந்தனக்கோட்டையை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் திருவேங்கைநாதன் (வயது32). திருமணம் ஆகாமல் இருந்த இவர் கடந்த 2021ம் ஆண்டு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து மணப்பெண் தேடி வந்தார்.
திருமண தகவல் மையம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் முகவரியை கொடுத்தது. அந்த குடும்பத்தில் திருவேங்கைநாதன குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த திருவேங்கடநாதன், அந்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவருக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக பத்திரிக்கை அடித்து உறவினர்கள மற்றும் நண்பர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.
இந்த தகவல் பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுதொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவேங்கைநாதனை தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவானதால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
3 ஆண்டுகளுக்கு பிறகு வேங்கைநாதனை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings