சென்னை:
அனைத்து உலோகங்களிலும் மிகவும் முக்கியமானது தங்கம். இதனை விரும்பாத பெண்களும், ஆண்களும் கிடையாது. ஆபரணங்களாக அணிந்து மகிழ்கின்றனர். இதனாலேயே தங்கத்தின் விலை நாள் ஒரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உயர்வு கண்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை திடீரென ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் தங்க நகையை வாங்காமல் இருப்பார்களா? நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதத்தான் செய்தது.

ஆனால் படிப்படியாக தங்கத்தின் விலை ரூ.53 ஆயிரம் வரை குறைந்தது. அட்சய திருதியை அன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்ந்து இறங்கியது. ரூ.53,640 வரை உயர்வு கண்டு விற்பனையான போதும் கூட்டம் குறையவில்லை. அதாவது ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1240 விலை உயர்வு கண்டும் ஒரு நாளில் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானது. அதாவது 24,000 கிலோ தங்கம் விற்பனையானது. தங்கத்திற்கு 3 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 15 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. காலங்கள் செல்ல செல்ல இவை உயரவே வாய்ப்பு உள்ளதாகவும், குறைய வாய்ப்பு இல்லை என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படியே உயர்ந்துகொண்டே சென்றால் ஒரு சவரன் தங்கத்தின் வலை ரூ.1 லட்சத்தை கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கும் வல்லுனர்கள், மத்திய அரசு மனம் வைத்தால் இறக்குமதி வரியை குறைக்லாம் என்றும் அவ்வாறு குறைத்தால் தங்கத்தின் விலை அதிரடியாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ தங்கத்தின் விலை உயர்ந்தாலும் சரி,, குறைந்தாலும் சரி வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையப்வோவதில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings