சென்னை:
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது. ஒரு சவரன் நகை ரூ.55 ஆயிரத்தை கடந்தது. தேர்தல் முடிவடைந்த பிறகு படிப்படியாக தங்கத்தின் விலை குறைவடைந்து வந்தது. சில நாட்களில் ஏற்றம் கண்டுவந்தது.
அட்சயதிருதியையை முன்னிட்டு மிகவும் குறைந்து வந்தது. 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை மிகவும் சரிவு கண்டு வந்தநிலையில் இன்று தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
அதாவது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்க ரூ.280 உயர்ந்து 53 ஆயிரத்து 800க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து 6 ஆயிரத்து 725க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை 30 காசு அதிகரித்து 91 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings