in

நீதிமன்றத்தில் ஆஜரானார் எடப்பாடி பழனிசாமி

சென்னை:

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தொகுதிக்கு முன்னதாக மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பணம் படைத்தவர். இந்தியாவில் விரல்விட்டு எண்ணும் கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர். அவரிடம் பணமும், அதிகாரமும் இருக்கிறது. அவருடைய சொத்துக்களை காப்பாற்றறிக்கொள்ளவும், அதிகப்படுத்திக்கொள்ளவுமே அவர் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை என்று கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சை எதிர்த்து திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது நீதின்றத்தில் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அப்போது வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

+1 பொதுத் தேர்வில் 91.17 % மாணவர்கள் தேர்ச்சி: கோவை முதலிடம்

வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்