சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில் 1002 இடங்களில் ரூ.739 கோடியில் புதிதாக பொதுக் கழிப்பிடங்கள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கி நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சியின் கடன், அதற்கான வட்டி தொகை எவ்வளவு என மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் (பாஜக) கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த மேயர் பிரியா, “மாநகராட்சிக்கு ரூ.1488.50 கோடி கடன் உள்ளது; அதற்காக மாதாந்திர வட்டியாக ரூ.8.5 கோடி செலுத்தப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து, சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, புது கடற்கரை ஆகியவற்றில் தூய்மைப் பணிகளை ரூ.11.63 கோடியில் தனியார் மேற்கொள்ள அனுமதி உட்பட இக்கூட்டத்தில் மொத்தம் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
GIPHY App Key not set. Please check settings