நாகை:
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை 2023-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மூலம் மீண்டும் நாகையிலிருந்து இலங்கைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் கப்பல் இயக்கப்பட்டது. வாரத்தில் 5 நாட்களுக்குக் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலமாகக் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.பின்னர் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த பிப்.22ம் தொடங்கி இயங்கி வந்தது. இந்நிலையில் நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் இன்று முதல் பிப்., 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings