புது டெல்லி,
ஒரு டிஜிட்டல் கைது சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர். இவர்கள் டிஜிட்டல் கைது மூலம் ஒரு பெண்ணிடம் ரூ. 84 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் இணையவழி குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் ராம் சிங், அக்ஷய் குமார் மற்றும் நரேந்திர சிங் சவுகான் என்கிற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இது போல டிஜிட்டல் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இது போல டிஜிட்டல் கைது எனக்கூறி பலரையும் ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதில் அக்ஷய் குமார் ஒரு வங்கி ஊழியர் என்றும், ராம் சிங் அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings