புதுடெல்லி:
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது இரவு 10 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகளுக்காக தீ அணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். விடுமுறை தினம் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings