சென்னை
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் விதமாக, இந்திய உணவு பதனத் தொழில்நுட்பக் கழக சார்பில் வீணாகும் தேங்காய் தண்ணீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நவீன கருவி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக இந்தக் கருவி கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய் எனவும், இந்திய உணவு பதனத் தொழில்நுட்பக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நீர்வளத்துறை துறை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார்.
இந்த சேவை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மட்டும் உள்ளது. மற்ற கோயில்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கும், அமைச்சர் சேகர்பாபுவிற்கும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings