சென்னை:
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன்பேரில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால், இவரும் கடந்த ஆண்டு (2024) இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன்பேரில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
இந்த நிலையில், திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ள இவர், கடந்த 2011-ல் தேமுதிகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.
அதேபோல் 2016-ல் மக்கள் தேமுதிக என்ற அமைப்பை தொடங்கி திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings