in

பொங்கல் கொண்டாட்டம்: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

சென்னை:

தமிழகத்தில் வருகிற 14ம் தேதி  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு  இடையே சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்த பேருந்துகள் வருகிற 10, 11, 12, 13 ஆகிய நாட்களுக்கு இயக்கப்படும் என்றார்.

சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும், மற்ற மாவட்டங்களுக்கு இடையேயும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது .

கோயம்பேட்டிலிருந்து இசிஆர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், காஞ்சிபுரம், வேலூர் திருத்தணி, மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளுடன், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் குறிப்பிட்ட சில பேருந்துகள் இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தமிழகத்தில் பனிப்பொழிவு… வானிலை அறிக்கை கூறுவது என்ன?

மாண்டவர் மீண்டார்… தரங்கம்பாடியில் மக்கள் பீதி… போலீசார் கலக்கம்