in

செல்போன் பயன்படுத்துவதா? அரசு பஸ் டிரைவர்களுக்கு கடிவாளம்

சென்னை:

செல்போன் என்பது அனைவரின் கைகளிலும் மூன்றாவது கையாகவே மாறிவிட்டது. இதனால் பல இன்னல்கள். வாகனத்தில் செல்லும்போது பேசிக்கொண்டே செல்வதால் விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதேபோல் ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் அரசு பேருந்து டிரைவர்களும் செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்குகின்றனர். இதனால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர்.

இந்தநிலையில் அரசு பேருந்து டிரைவர்கள் செல்போனில் பேசியபடி பேருந்து இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்தது.

இந்தநிலையில் அரசு பேருந்து டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் (பணியிடை நீக்கம்) செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு டிரைவர்களுக்கு தெரியும்படி அனைத்து நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்ட போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நகை பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்…!

தமிழ்நாட்டை நெருங்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை