சென்னை
சென்னை மெரினாவில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் இந்த சாகச நிகழ்ச்சியை காண மிகுந்த ஆர்வம் காட்டினர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மெரினாவிற்கு மக்கள் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என்று பல்வேறு வாகனங்கள் மூலமாக வருகை தந்தனர். இதனால் மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக்கப்பட்டது.
3.5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் வீதம் இயக்கப்பட்டது. அரசினர் தோட்டம், எல்.ஜி.சி., சென்ட்ரல், எழும்பூர் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை சுமார் 1.70 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள என்றும், நேற்று ஒரே நாளில் வழக்கத்திற்கு அதிகமாக 4 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர் என்றும் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings