சென்னை
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்கு பிறகு கூலி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். இதையடுத்து சென்னைக்கு கடந்த வாரம் திரும்பிய நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 30ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திலிருந்து வெளியேறும் தமனி எனப்படும் ரத்த நாளத்தில் இவருக்கு வீக்கம் இருந்தது. இதற்கு அறுவை சிகிச்சையின்றி டிரான்ஸ்கேத்தடர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதவியல் துறை மூத்த மருத்துவர் சாய் சதீஷ் இந்த சிகிச்சையை ரஜினிக்கு அளித்தார். தமனி ரத்த நாளத்தை முழுமையாக அடைத்திருந்த வீக்கத்தை சரி செய்து, அங்கு ஸ்டென்ட் பொருத்தியுள்ளார்.
ரஜினிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சை குறித்து அவரது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக விளக்கம் கொடுத்துள்ளோம்.
திட்டமிட்டபடி ரஜினிக்கு சிகிச்சை நல்லபடியாக செய்யப்பட்டுள்ளது. தற்போது ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது. குணமடைந்து வருகிறார். ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புகார் என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவர் நாளை (4ம் தேதி) வீடு திரும்பலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings