திருவாடானை
திருவாடானை தெற்கு நடுத்தெரு ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் ஆலய பால்குட உற்சவ விழா நடைபெற்றது,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு நடுத்தெரு ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் ஆலய உற்சவ விழா கடந்த 17ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று (செப்., 24) உற்சவ விழா நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் விரதம் இருந்து பால்குட;ங்களை தலையில் ஏந்தி வீதி உலாவாக வந்தனர்.
ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் இருந்து பால் குடங்களில் தலையில் சுமந்து வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings