# நீலகிரி மாவட்டம். ஓணம் மற்றும் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் சேவை
தென்னக ரெயில்வே அறிவிப்பு
இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் மலை ரெயிலில் பயணித்தவாறு மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை உள்ள அழகிய மலை முகடுகளையும், இயற்கை காட்சிகளையும், வன விலங்குகளையும், வெள்ளியை உருக்கி ஊற்றுவது போல் அழகிய நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்தவாறு பயணம் செய்து வருகின்றனர்.
இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சீசன் துவங்க உள்ள நிலையில் நாளை ( 14 ம் தேதி ) மற்றும் நாளை மறுநாள் 15ம் தேதி வரை இரண்டு நாள் மலை ரெயில் சிறப்பு சேவைகளை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி குன்னூரிலிருந்து காலை 8.20 மணிக்கு உதகை வரையிலும், மாலை 4.45 மணிக்கு உதகையிலிருந்து குன்னூர் வரை என இருமுறையும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மன மகிழ்வு பயணமாக உதகை – கேத்தி இடையே மூன்று முறையும் மலை ரெயில் இயக்கப்படவுள்ளது.
உதகை முதல் கேத்தி வரை காலை 9.45 மணி, 11.30 மணிக்கும், மாலை 3.00 மணிக்கும் சிறப்பு மலை ரயில் கேத்தி வரை இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
இப்பயணத்தின் போது உதகை – கேத்தி இடையே எழில்மிகு இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதோடு புகழ்மிக்க கேத்தி மலை குகை மற்றும் ரயில் நிலையத்தையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.இதற்கான பயணச்சீட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல்). 8870917777
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings