in

மீஞ்சூர் பகுதியில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

மீஞ்சூர்

ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மீஞ்சூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மீஞ்சூர் அதிரடி போலீஸ் படையினர் மீஞ்சூர் நாவலூர் டி.எச்.சாலை அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மூட்டையுடன் வந்த சந்தேக நபரை பிடித்து விசாரணை செய்த போது போதை பொருளான ஜர்தா மாவா கலவை கொண்ட 10 கிராம் எடை கொண்ட 200 பாக்கெட்டுகள் சுமார் இரண்டு கிலோ கைபற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அவன் பொன்னேரி ஆரிப் டி.எச. ரோட்டை சேர்ந்த கௌதுல் ஆலம் (வயது 50) என்பதும் போதை பொருட்களை தனது கடையில் வைத்து விற்பனை செய்வதற்காக தனது நண்பரான மீஞ்சூர் பேசவுபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை செய்ததில் கௌதுல் ஆலம் தனது நண்பரான ராஜேஷ் இருவரும் கூட்டாக சேர்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து மாவா ஜர்தா மற்றும் சீவல் பாக்குகள் உள்ளிட்ட குட்கா பொருட்களை வாங்கி வந்து மீஞ்சூர் ராஜேஷ் வீட்டில் வைத்து சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து கௌதுல் ஆலம் தனது கடையில் வைத்து விற்பனை செய்ததாகவும், ராஜேஷ் மீஞ்சூர் பொன்னேரி பகுதிகளில் மோட்டார் சைக்கிளை வைத்து விற்பனை செய்து வந்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர். அதன் அடிப்படையில் மீஞ்சூர் கேசபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் வீட்டில் சோதனை செய்த போது 75 கிலோ போதை வஸ்து ஜர்தா கைப்பற்றப்பட்டது. பிடிபட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கேரள அரசின் நெருக்கடி தமிழகத்திற்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்

மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழகஅரசு விரைவாகநடவடிக்கை: ஜோதிமணி எம்பி