*குன்னூர் மலைபாதையில் சாலை விரிவாக்க பணி காட்டு யானைகள் செல்லும் வழிகள் தடுக்கப்பட்டுள்ளதா என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி வழக்கறிஞர் மோகன் தலைமையிலான குழுவினர் வனத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருடன் ஆய்வு*
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் கோடை சீசனில் அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சார்பாக சாலை விரிவுபடுத்தும் பணி தற்போது 10 இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் மலைபாதையில காட்டு யானைகள் அடுக்கடி உணவிற்காக சாலையை கடப்பதால காட்டு யானைகள் செல்வதற்கு போதிய இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மோகன் தலைமையிலான வழக்கறிஞர்கள் அடஙகிய குழுவினர் மலைபாதையில் 10 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் காட்டுயானைகள் செல்லும் வழித்தடங்களில் யானைகள செல்ல போதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கும் வனத்துறையினரிடம் வழித்தட பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
உள்ளாட்சி முரசு நாளிதழ்.
நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர்.
A.ஜான்டிசோசா(டானியல்). 8870917777
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings