சென்னை
சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் பாவ, புண்யிம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டனம் தெரிவித்தார். அவரிடம் மகாவிஷ்ணு மரியாதை குறைவாக பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. யாராக இருந்தாலும் இதுதொடர்பாக நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.
இந்தநிலையில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த மகாவிஷ்ணு ஒருவீடியோ பதிவை வெளியிட்டார். அதில், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளியும் வகையில் நான் என்ன தறவான கருத்தை சொல்லிவிட்டேன். சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் என் மீது மாற்றுத்திறனாளிகள் பலர் புகார் கொடுத்துள்ளார்கள். பரம்பொருள் பவுண்டேசன் அலுவலகத்திலும், திருப்பூரில் உள்ள என் இல்லத்திலும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் நான் தமிழகத்தில் இருக்க வேண்டும். நான் பேசியதற்கான விளக்கத்தை கொடுக்க நான் தயாராக உள்ளேன்.
இன்று (சனிக்கிழமை) மதியம் 1.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறேன். இந்திய சட்டத்தின் மீதும், தமிழக போலீசார் மீதும் எனக்கு மதிப்பு உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்னை பற்றி அதிகம் பேசி இருந்தார். என்மீது ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. அதற்கு விளக்கம் கொடுக்க தமிழகத்தில் இருக்க வேண்டும். இறைவனிடம் சரணாகதி செய்து நேரடியாக உங்களை சந்திக்கிறேன் என்று அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings