திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் வனப்ப்குதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமராஜர் அணை பகுதிக்கு அருகில் பதர்தீன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் துப்பாக்கியால் பெண் கடமானை வேட்டையாடி, துண்டு துண்டாக வெட்டிக் கொண்டிருந்த வெள்ளோடு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரது மகன் ஆல்வின் எடிசன் வனத்துறையினரை கண்டதும் துப்பாக்கியுடன் தப்பி ஓடி தலைமறைவானார்.
சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகனை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வன விலங்குகளை வேட்டையாடக்கூடாது என்று ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தும், இன்றைய காலகட்டத்திலும் இவ்வாறு நடப்பது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings