நீலகிரி மாவட்டம்#.
நியூ டெல்லியில் இயங்கி வரும் இந்திய சமூகவியல் சங்கமும் நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் (தன்னாட்சி) கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆய்வியல் வரலாற்றுத் துறையும் இணைந்து ஐந்து நாள் சர்வதேச ஆய்வுமுறை பயிற்சி பட்டறையை நடத்தியது.
(ஹைபிரிட் முறையில்). இந்த ஐந்து நாள் பயிற்சி பட்டறையில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஷீலா அவர்களும் கல்லூரிச் செயலர் அருட்சகோதரி அல்போன்சா அவர்களும் தலைமையுரையாற்றானர்.
தாவரவியல் துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் டாக்டர். விசாலாட்சி.N வரவேற்புரை வழங்கினார். முதன்மை விருந்தினர் மற்றும் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் டாக்டர். P. குமரன், மேல்விசாரம் ராணிப்பேட்டை, ஆராய்ச்சி பற்றிய உரையை வழங்கி, மாணவர்களுடன் தனது ஆராய்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான மிஸ்டர். பெனெட் ராஜதுரை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுத் தலைவர் மற்றும் UGC CARE பட்டியலிதழின் செயலாளர், ஆராய்ச்சி முறை பற்றிய உரையை வழங்கினார்,
இது மாணவர்களுக்கிடையே மிகவும் ஈடுபாட்டுடனும் ஆர்வமுடனும் நடந்தது. மேலும், டாக்டர். T. ரஜீதா, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி மற்றும் டாக்டர். P. பால்பாண்டி, அரசியல் அறிவியல் துறை உதவிப்பேராசிரியர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, மதுரை ஆகியோர் உரையாடல் அமர்வை நடத்தினர்.
நாமக்கல்லில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் டாக்டர். S. சுவாமிநாதன், முக்கிய உரையை வழங்கி, மாணவர்களுடன் தனது ஆராய்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆராய்ச்சிமுறை பற்றிய ஒரு புத்தகம் கல்லூரிச் செயலர் அருட்சகோதரி அல்போன்சா K.C. அவர்களால் வெளியிடப்பட்டு, டாக்டர். S. சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. நிறைவு உரையை முனைவர் மாரிமுத்து, வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர், காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி வழங்கினார்.
அமர்வின் முடிவில், மாணவர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து, சான்றிதழ்களைப் பெற்றனர். இந்த பயிற்சிப்பட்டறை மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளை எவ்வாறு மேற்கொள்வது மற்றும் பல்வேறு துறைகளில் இலக்கியத்தை ஆய்வு செய்வது பற்றி அறிய உதவியது.
இந்த பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் வரலாற்றுத் துறையின் தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் டாக்டர். R.சானி ரஸ்கின், அவர்கள் செய்திருந்தார் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் டாக்டர். N. சுதா, டாக்டர். சௌம்யா ராஜ் S.R., திருமதி. ரேவதி R., டாக்டர். டேனிஷ் பாத்திமா R., மற்றும் திருமதி. M. சாந்தி ஏற்பாடுகளைச் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 150 மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று பயனடைந்தனர்.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல்). . 8870917777
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings