சென்னை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 21 பேர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் திமுக,அதிமுக, பாஜக தமாகா கட்சிகளை சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இந்த வழக்கில் சென்னை வியாசர்பாடி எஸ்.எம்.நகரை சேர்ந்த அஸ்வத்தாமன் (32) கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் கொலையாளிகளை திரைமறைவில் இருந்து இயக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பாஜக நிர்வாகிகளில் ஒருவரான பால் கனகராஜ், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று செம்பியம் காவல் நிலைய போலீசார் நேற்று இரவு சம்மன் அனுப்பினர். இதையடுத்து பால் கனகராஜ் எழும்பூரில் உள்ள தனிப்படை போலீசாரின் அலுவலகத்தில் இன்று காலை நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings