திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தநிலையில் கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே அதிகாலை 3 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் நான்கு மணிநேரத்தில் மூன்று பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
முதற்கட்டமாக 70 பேர் காயடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings