in

எங்களையா துரத்திறிங்க… போக முடியாது… அடம் பிடிக்கும் யானைகள்…

நீலகிரி:

குன்னூர் அருகே  வனத்திற்குள் செல்ல மறுக்கும் காட்டு யானைகள்  இரண்டாவது நாளாக  விரட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள   கொலகம்பை,  தூதூர் மட்டம் ,  கிரேக் மோர் எஸ்டேட் ஆகிய பகுதிகளில்  நேற்று இரவு வந்த  ஐந்து காட்டு யானைகள்  இங்குள்ள  ரேஷன் கடைகள்  மற்றும்  மளிகை  கடைகளை  சூறையாடியது .

இதனால்  இப்பகுதி  மக்கள்    பெரும் அச்சத்தில் உள்ளனர் . இங்கு முகாமிட்டுள்ள காட்டு யானைகளை  வனப்பகுதிக்கு விரட்டியடிக்க  வன ஊழியர்கள்  தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தாலும்  வனத்திற்கு செல்ல மறுத்து  மீண்டும்  குடியிருப்பு பகுதியிலேயே  சுற்றி  திரிகிறது .

குன்னூர் ,குந்தா  வனச்சரகத்திற்கு உட்பட்ட  வன ஊழியர்கள் குழுவினர்  நான்கு  பிரிவாக  பிரிந்து  காட்டு யானைகளை  கண்காணித்து  வருகின்றனர் .

வனத்தை விட்டு  வெளியேறி  முப்பது மணி நேரத்திற்கு மேலாக  காட்டு யானைகள்  பொதுமக்களை அச்சுறுத்தி  வருவதுடன்   வனத்துறையினருக்கும்  போக்கு காட்டி வருவது  குறிப்பிடத்தக்கது .

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பாமக தலைவர் அன்புமணி மீது வழக்குப்பதிவு

பிடிபட்டது 12 அடி நீள ராஜநாகம்