சென்னை
சென்னை போரூரில் அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பவுன்சர் கைது செய்யப்பட்டார். 6 பெண்கள் மீட்கப்பட்டனர்.
சென்னை போரூரில் அடுக்குமாடி குடியிருப்பில் மையமாகக் கொண்டு அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் அழகு நிலையம் என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி அங்கு துணை ஆணையர் உள்பட போலீசார் அதிரடியாக களம் இறங்கி விசாரணையில் ஈடுபட்டனர்.
அழகு நிலையம் நடத்துவது போல அடுக்குமாடி குடியிருப்பு அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது .
வேலை தேடி வரக்கூடிய வடமாநில பெண்களுக்கு வேலை தருவதாக அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தெரியவந்தது.
இதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்களை போலீசார் மீட்டனர். பவுன்சர் தினேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings