சென்னை:
தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் கஞ்சா மற்றும் போதை ஊசிகள், போதை மாத்திரைகள் நடமாட்டத்தை அடியோடு ஒழித்துக் கட்ட தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் அன்பு, சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் சென்ட்ரல் ரயில் நிலையம் 6வது பிளாட்பார்மில் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி, முதல் நிலை காவலர் சரத்குமார் மற்றும் காவலர் அரவிந்தன் ஆகியோர் தன்பாத் ஆலப்புழா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை சோதனையிட்டனர்.
அப்போது 2 பேர் போலீசை பார்த்ததும் திடீரென வணக்கம் வைத்தனர். அவர்களை பார்த்ததும் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை அழைத்து, பையை சோதனையிட்டனர். அதில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த சதீஷ்கர் மாநிலம் சாம்பா ஜான்ஜி கிர் சாகூரா டாகா பகுதியை சேர்ந்த அசோக் குமார் ரோகிதாஸ் (வயது 28), மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா கார்டன் ரீச் ராம் நகர் சந்து பகுதியை சேர்ந்த முகமது நஹீம் (25) ஆகிய இருவரையும் கைது செய்து சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings