நாகர்கோவில்
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் தலித் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும், தொடர் கொலைகளுக்கு உறுதியான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று நாகர்கோவில் அறிஞர் அண்ணா ஸ்டேடியம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்குக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.போராட்டத்தில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings