in

+1 பொதுத் தேர்வில் 91.17 % மாணவர்கள் தேர்ச்சி: கோவை முதலிடம்

சென்னை:

தமிழகத்தில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விவரங்களை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி முதல் 25ம்தேதி வரை 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில் மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் மாணவிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 ஆகும். மாணவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 ஆகும். 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

இதில் மொத்தம் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 91.17 சதவீதமாகும்.

மாணவிகள் 4லட்சத்து 4 ஆயிரத்து 143 பேர் (94.69%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 35 ஆயிரத்து 369 பேர் (87.26%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் அரசு பள்ளியில்85.75 சதவீதம் பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 92.36 சதவீதம் பேரும், தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.09 சதவீதம் பேரும், இருபாலர் பள்ளிகளில் 91.61 சதவீதம் பேரும், பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீதம் பேரும், ஆண்கள் பள்ளிகள் 81.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குன்னூர் தீயணைப்பு வளாகத்தில் கரடியால் பரபரப்பு

நீதிமன்றத்தில் ஆஜரானார் எடப்பாடி பழனிசாமி