in

யானைத் தந்தம் விற்க முயன்ற 8 பேர் கைது!

சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் 2 யானைத் தந்தத்தை ரூ.1கோடிக்கு விற்க முயன்ற 8பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு யானைத் தந்தம் கடத்தி வருவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற தனிப்படையினர், சந்தேகப்படும்படி இருந்த 2பேரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் யானைத் தந்தத்தை விற்க வந்ததும், யானைத் தந்தத்தை கருமந்துறையில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து வனத்துறை தனிப்படையினர் கருமந்துறைக்கு சென்று ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 தந்தத்தைப் பறிமுதல் செய்தனர்.
இவற்றை விற்க முயன்றது கருமந்துறையைசேர்ந்த முரளி (28),சங்கர் (35), பாலு (31), சக்திவேல்(48), ஜெகநாதன் (46), ராஜீவ்காந்தி(34), கிருஷ்ணன்(76), இளங்கோவன்(56) என்பதும், இந்த கும்பல் யானைத் தந்தத்தை வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1கோடிக்கு விற்க முயன்றதும் விசாரணையில் தெரிந்தது. யானைத் தந்தத்தைக் கேரளாவிலிருந்து முரளி, கடந்த வாரம் ரயிலில் கடத்தி வந்ததும், சேலம் ஜங்சனில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு வந்து பேருந்தில் யானைத் தந்தத்தை கருமந்துறைக்கு கடத்தி சென்று பதுக்கி வைத்துள்ளார். பிடிபட்ட 8பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வனத்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்து, சேலம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி மத்தியச் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 7செல்போன், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், எழுத்தர் கைது

வங்கக்கடலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவு