குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 78வது ஆண்டு காலாட்படை தினம் அனுசரிக்கப்பட்டது போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வெலிங்டன் போர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1947ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி முதல் காலாட்படையினர் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். நமது காலாட்படையின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் அனுசரிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக காலாட்படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், இன்று காலாட்படை தினம்அனுசரிக்கப்பட்டது . இதனையொட்டி, வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, பயிற்சி ராணுவ வீரர்,
ஓய்வு பெற்ற ராணுவ முன்னாள் பிரிகேடியர் கமாண்டென்ட் தேவராஜ்,
ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டண்ட் வீரேந்திர வாட்ஸ், ஆகியோர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள் , ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு , உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.JOHNDESUZA. 8870917777.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings