பொழிச்சலூர்
செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் மலை ஒன்றியம் பொழிச்சலூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பொழிச்சலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பா.வனஜா தயாளன் தலைமை ஏற்று பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் இந்திய தேசியக் கொடி ஏற்றினார்.
அனைவரும் கொடி வணக்கம் செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் அண்ணல் காந்தியடிகள், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுதந்திரத்திற்காக போராடியதை பற்றி மாணவ மாணவிகளிடம் ஊராட்சி மன்ற தலைவர் பா. வனஜா தயாளன் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் வேடமிட்டு பேச்சுப்போட்டி நடனம், நாட்டியம், கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் பொழிச்சலூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் V.ஜோசப், பொழிச்சலூர் ஊராட்சி மன்ற செயலாளர் சங்கர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி 78வது சுதந்திர தினத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings