புதுடெல்லி:
நாட்டின் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கம, மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளுக்கம், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கம், பீகார், ஒடிசாவில் தலா 5 தொகுதிகளுக்கம், ஜார்க்கண்டடில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் நட்சத்திர வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியிலும், லக்னோ தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும், மும்பை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவும் போட்டியிடுகின்றனர்.
காலை 11 மணி நிலவரப்படி உத்தரபிரதேசத்தில் 27.76 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் 15.93 சதவீத வாக்குகளும், மேற்கு வங்க மாநிலத்தில் 32.07 சதவீத வாக்குகளும், பீகாரில் 21.11 சதவீத வாக்குகளும், ஒடிசாவில் 21.07 வாக்குகளும், ஜார்கண்ட்டில் 26.18 சதவீத வாக்குகளும், ஜம்மு காஷ்மீரில் 21.37 சதவீத வாக்குகளும், லடாக்கில் 27.87 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings